அருப்புக்கோட்டை, மார்ச் 30: அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ நகர் பகுதியில் உள்ள வெள்ளைக்கோட்டை குழந்தைவேல் புரம், கீழரதவீதி உள்பட பல பகுதிகளில் உள்ள நெசவாளர்களிடமும், பொதுமக்களிடமும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் நகரில் தினசரி குடிநீர் வழங்கப்படும். கொரோனா காலத்தில் நான் தான் உங்களோடு இருந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். ஆனால், அதிமுக வேட்பாளர் கொரோனா காலத்தில் எட்டி கூடப்பார்க்கவில்லை என்று கூறினார்.
முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர திமுக
செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, நகர அவைத்தலைவர் கணேசன், நகர துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, முன்னாள்நகர் மன்ற துணைத்தலைவர் தமிழ்காந்தன், திமுக பிரமுகர்கள் சிவசங்கரன், திருத்தணி முருகன், ஜோதிகா ராஜேந்திரன், இளைஞரணி இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சோலையப்பன், காங்கிரஸ் பிரமுகர் வழக்கறிஞர் ஜோதிமணி, சிபிஎம் காத்தமுத்து, சிபிஐ இளங்கோ, விடுதலை சிறுத்தை கட்சி முருகன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.