×

தேர்தல் பணியாற்றுவோருக்கு ஏப்.7ல் விடுமுறை ஜாக்டோ-ஜியோ கோரிக்கை

மதுரை, மார்ச் 30: சட்டசபை தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பினர் கலெக்டர் அன்பழகனிடம் அளித்த மனுவில், ‘சட்டசபை தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த பல ஆசிரியர்களுக்கு விண்ணப்பித்தும் தபால் ஓட்டு கிடைக்கவில்லை. அவர்களின் சட்டசபை தொகுதியும் பிரித்து காட்டப்பட வில்லை. கடைசி தேர்தல் வகுப்புக்கு முன் தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும். தேர்தல் முடித்து, அதற்கான பொருட்களை ஒப்படைக்கும் பணிகள், அடுத்த நாள் வரை நடப்பதால் தேர்தல் பணி பார்க்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏப்.7ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்’ இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : Holiday Jacto-Jio ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு