×

20க்கும் மேற்பட்ட கிராங்களில் நத்தம் விசுவநாதன் தீவிர வாக்குசேகரிப்பு.

நத்தம், மார்ச் 30: நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம். விசுவநாதன் போட்டியிடுகிறார். நேற்று நத்தம் தொகுதியிலுள்ள சாணார்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த செங்குறிச்சி, குரும்பபட்டி, வல்லம்பட்டி, வலசு, மாமரத்துப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குகள் சேகரித்து பேசியதாவது: மீண்டும் நீங்கள் என்னை தேர்ந்தெடுப்பதன் மூலம் இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி, ஆயத்த ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்க ஜவுளி பூங்கா அமைப்பேன். மேலும் இந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி குடும்ப தலைவிக்கும் மாதம் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய், விலையில்லா வாஷிங் மெஷின், கேபிள் இணைப்பு, எரிவாயு சிலிண்டர், நிலமும், வீடும் இல்லாத மக்களுக்கு அரசு சார்பில் கான்கிரிட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று பேசினார். அவருக்கு கிராம மக்களும் பலஇடங்களில் வரவேற்பு அளித்தனர். நத்தம் ஒன்றியகுழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி ஒன்றியசெயலாளர்கள் ராமராஜ், சுப்பிரமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் சுப்பிரமணி, வடக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கல்யாணசுந்தரம், செங்குறிச்சி ஊராட்சிதலைவர் மணிமாறன், முன்னாள் ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர்கள் பலரும் கலந்து கொண்ட
னர்.

Tags : Natham Viswanathan ,
× RELATED டிவி விளம்பரத்தில் வருவதுபோல்...