×

13பேர் சாவுக்கு நீதி கிடைத்திட திமுகவுக்கு வாக்களியுங்கள் கீதாஜீவன் பேச்சு தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்குபதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி,மார்ச்30: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற  தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய சீட்டுகளை பொருத்தும் பணி நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தமாக வைக்கப்பட்டிருந்தன. பெங்களூருவில் இருந்து பெல் நிறுவன இன்ஜினியர்கள் வந்திருந்து ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் முழுமையாக பரிசோதனை செய்து வாக்குபதிவிற்கு தயார்செய்தனர்.

தொடர்ந்து 6 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இயந்திரங்கள் மட்டும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை பொருத்தும் பணி நடந்தது.6 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இந்த பணியை மண்டல தேர்தல் குழுவினர் மேற்கொண்டனர். மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 2097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு கண்ட்ரோல் யூனிட் என மொத்தம் 2,097 கண்ட்ரோல் யூனிட் தேவை. மேலும் 20 சதவீதம் ரிசர்வ் என மொத்தம் 2,518 கண்ட்ரோல் யூனிட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதுபோல மாவட்டத்தில் விளாத்திகுளம் மற்றும் திருச்செந்தூர் 2 தொகுதிகளில் மட்டுமே 15 வேட்பாளர்கள் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு மின்னணு வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி, வைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 4 தொகுதிகளிலும் 15 வேட்பாளர்களுக்கு மேல் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. எனவே 6 தொகுதிகளிலும் 20 சதவீத ரிசர்வையும் சேர்த்து மொத்தம் 4,254 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் தான் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகள் ஒட்டும் பணி நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை ஒட்டும் பணி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.

இதேபோல் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வாக்குச்சீட்டு ஒப்புகை இயந்திரங்களில் (விவிபாட்) வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றை பதிவு செய்யும் பணியும் நடந்தது. 6 தொகுதிகளிலும் 20 சதவீத ரிசர்வ் என மொத்தம் 2600 விவிபேட் இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றன.
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், சப்கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், சப் கலெக்டர் (பயிற்சி) சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள்  உடனிருந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற  தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை பொருத்தும் பணியும், விவிபாட் கருவியில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யும் பணிநடந்தது.

Tags : DMK ,Geethajeevan ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு