×

செய்யாறு அருகே புரிசை கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா

செய்யாறு, மார்ச் 30: செய்யாறு அருகே புரிசை கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் புரிசை கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவத்தின் 10ம் நாள் விழா வெகு விமரிசையாக நடந்தது. கடந்த 17ம் தேதி கிராம தேவதை உற்சவத்துடன் தொடங்கிய பிரமோற்சவ விழாவில் 18ம் தேதி விநாயகர் உற்சவமும், 19ம் தேதி கொடியேற்றமும், அன்று இரவு கேட்டை உற்சவமும், 20ம் தேதி சூரிய பிரபை உற்சவமும், 21ம் தேதி மயில் வாகன சேவையும், 22ம் தேதி பஞ்சமூர்த்தி வீதி உலாவும், 23ம் தேதி அதிகார நந்தி வாகன சேவையும் 24ம் தேதி சந்திர பிரபை உற்சவமும், 25ம் தேதி ரதோற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.

தொடர்ந்து 26ம் தேதி குதிரை வாகன சேவையும், 27ம் தேதி நடராஜர் உற்சவம், இரவு மாவடி சேவை உற்சவம் நடந்தது. 28ம் தேதி திருக்கல்யாண வைபவமும் ரிஷப வாகன வீதி உலா புறப்பாடு வெகு விமரிசையாக நடந்தது. பிரமோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அகத்தீஸ்வரரை வழிபட்டு சென்றனர். புரிசை கிராமத்தில் நேற்று நடந்த பிரமோற்சவ விழாவில் திருக்கல்யாண வைபவத்தில் உற்சவமூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags : Agathiswarar temple ,Purisai village ,Seiyaru ,
× RELATED செய்யாறு அருகே அரசு...