வேலூர், மார்ச் 30: வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் செலவினம் தணிக்கை 2ம் கட்டமாக இன்று நடக்கிறது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கான செலவின பார்வையாளர் ஆதர்ஷ் ஹர்ஸ் தலைமையில் உதவி செலவின பார்வையாளர்கள் உள்ளடங்கிய குழு 26ம் தேதியும், 30ம் தேதியும் மற்றும் 4ம் தேதியும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான தினசரி செலவினம் தொடர்பாக தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்ட தணிக்கை கடந்த 26ம் தேதி நடந்தது. தொடர்ந்து 2ம் கட்டமாக இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள், வேட்பாளர்களின் தேர்தல் செலவின விவரங்கள் மற்றும் ஆவணங்களை வேலூர் வேலப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உள்ள தணிக்கை குழுவில் ஆய்விற்கு உட்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.