×

திருவலம் ரயில் நிறுத்தத்தில் பாழடைந்த ரயில்வே குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை

திருவலம், மார்ச் 30: திருவலம் அடுத்த ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சியில் உள்ள திருவலம் ரயில் நிறுத்தத்தில் பாழடைந்துள்ள ரயில்வே குடியிருப்புகளை சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் அடுத்த ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திருவலம் ரயில் நிறுத்தம் இயங்கி வருகிறது. இந்த ரயில் நிறுத்தம் வழியாக சென்னையிலிருந்து காட்பாடி வழியாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு சென்று வரும் பயணிகள் மற்றும் போக்குவரத்து ரயில்கள் சென்று வருகின்றன.

மேலும் இப்பகுதியில் இருந்து பல்வேறு பணிகளுக்காக சென்றுவர தினசரி ரயில்கள் இந்த ரயில் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிறுத்தத்தில் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்ற ரயில் நிறுத்த வளாகத்தில் 12 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் நாளடைவில் சேதமடைந்து வந்தது.

இதனால் குடியிருப்புகளில் ஊழியர்கள் தங்கி வசிப்பதற்கு பல்வேறு சிரமங்களை அடைந்து வந்தனர். இதனையடுத்து குடியிருப்புகள் நாளடைவில் மேலும் சேதமடைந்து வந்தது. இதனால் குடியிருப்புகளில் இருந்து சிலர் காலிசெய்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதனையடுத்து நான்கு குடியிருப்புகளில் மட்டும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். எனவே சேதமடைந்துள்ள குடியிருப்பு கட்டிடங்களை சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruvalam railway ,
× RELATED திருவலம் ரயில்வே மேம்பாலம்...