×

திருச்சி கலெக்டர் பேட்டி பீமநகர் பள்ளிவாசலில் வாக்குசேகரித்த மேற்குதொகுதி வேட்பாளர் கே.என்.நேருவுக்கு இஸ்லாமிய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு

திருச்சி, மார்ச் 30: திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, பீமநகரில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய பெரியோர்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக திமுக முதன்மை செயலாளர் கே. என். நேரு போட்டியிடுகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனது தொகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், வேட்பாளர் கே.என்.நேரு, நேற்று பீமநகரில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அங்கிருந்த இஸ்லாமிய பெரியோர்கள் அவரை வரவேற்றனர். வேட்பாளர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பின்போது, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாஸ்கர் மற்றும் 47, 48, 44 வது வட்ட செயலாளர்கள் செல்வராஜ், ரஹீம், தனசேகர் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலை மத்திய பஸ் நிலையம் பகுதி, பெரிய மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது வேட்பாளர் கே.என்.நேருவிற்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags : Islamic ,KN Nehru ,Bhimanagar Mosque ,
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...