×

பல்வேறு வழக்குகளில் தொடர்பு 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தஞ்சை, மார்ச் 30: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜா(எ) கட்ட ராஜா(40). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின் பேரில் தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் கட்ட ராஜாவை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து கட்ட ராஜா குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே போல், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் வேலூர் மெயின் ரோடு, செல்லப்பா கவுண்டர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் விக்கி(எ)விக்னேஸ்வரன்(24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து தஞ்சை எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் பட்டுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் ஜவகர் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து விக்னேஸ்வரன் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு