×

அரிமளம் அருகே ஓணாங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருமயம்.மார்ச்30: அரிமளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 14ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது.

இதனிடையே அடுத்தடுத்து நாட்களில் நடைபெற்ற திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல், பால்குட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் நேற்று 9ம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதனிடையே இன்று காப்பு களையப்பட்டு விழா நிறைவடைகிறது.

Tags : Onangudi Muthumariamman Temple ,Arimalam ,
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...