×

கலெக்டர் ஆய்வு மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவேன் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் பிரசாரம்

புதுக்கோட்டை, மார்ச் 30: விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் கலைக்குடிபட்டி, விளித்துப்பட்டி, கருப்பாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் அனல் பறக்கும் வெயிலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின்போது மக்கள் மத்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் உங்களோடு இருப்பேன். மேலும் விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அதிமுக அரசு வழங்கியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்கு கொண்டுவந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை மக்களுக்காக உழைப்பேன். வரலாற்று சிறப்பு மிக்க காவிரி- வைகை -குண்டாறு இணைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் இந்த பகுதியில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பும். கதிலத்தடி நீர் உயரும். இதேபோல் பலத்திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்.கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டியுள்ளேன். என் உயிர் உள்ளவரை உங்கள் எண்ணங்கள் அறிந்து செயல்படுவேன் என்றார்.

Tags : AIADMK ,Vijayabaskar ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...