×

இலுப்பூரில் கோயிலுக்கு சென்று திரும்பிய மூதாட்டியிடம் செயின் பறிப்பு பைக் திருடன் கைது

இலுப்பூர், மார்ச் 30: இலுப்பூரில் மூதாட்டியின் சையினை அறுத்துக்கொண்டு ஓடிய பைக் திருடனை போலீசார் கைது செய்தனர். இலுப்பூர் கண்ணாரத் தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி மாணிக்கத்தம்மாள் (78). இவர் கடந்த 24ம் தேதி இலுப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும்போது பைக்கில் வந்த திருடன் மாணிக்கத்தம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சையினை பறித்துக்கொண்டு தப்பினான். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இலுப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாத்தூர் போலீசார் நடத்திய சோதனையில் செயின் திருட்டு வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் நாகமங்கலம் அடுத்த மேக்குடியை சேர்ந்த சுப்பிரமணி மகன் வேலுச்சாமி (45) என்பவரிடம் நடத்திய விசாரணையில் இலுப்பூரில மூதாட்டியின் சையினை பைக்கில் வந்து அறுத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவனிடம் இருந்து கைப்பற்றிய சையினை கைப்பற்றிய இலுப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Chain ,Iluppur ,
× RELATED பெண்ணிடம் சங்கிலி பறிப்பு