தா.பழூர், மார்ச் 30: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் பகுதியில் விஏஓ அசோக்குமார் வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சவுடு மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்தபோது மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி பொக்லைனை விட்டு விட்டு மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து இயந்திரத்தை போலீசார் உதவியுடன் எடுத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் கீழ் குடிகாடு கிழக்குத் தெருவை சேர்ந்த குருசேவ்(53) மற்றும் சிலால் மெயின் ரோடு தெருவை சேர்ந்த அறிவழகன் மகன் ஜீவா(20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் மீது வழக்குப்பதிந்து தப்பி ஓடியவர்களை தா.பழூர் போலீசார் தேடி வருகின்றனர்.