×

சீர்காழி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கு சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

சீர்காழி, மார்ச் 30: சீர்காழி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படவுள்ள 348 வாக்குச் சாவடிக்கு தேவையான 418 வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, சுயேச்சைகள் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் பொருத்தும் பணி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது இப்பணிகள் சீர்காழி தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணன், தாசில்தார் ஹரிதரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் எஸ்ஐக்கள் சுரேஷ் ஜீவானந்தம் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Sirkazhi ,
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்