×

தலைஞாயிறு தனி தாலுகாவாக அமைக்கப்படும் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் பிரசாரம்

வேதாரண்யம், மார்ச் 30: வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஓ எஸ் மணியன் மணக்குடி, வடுவூர், ஆய்மூர், அருந்தவம்புலம், நீர் முலை, திருவிடைமருதூர், நத்தபள்ளம், புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பி–்ல் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தலைஞாயிறு தனி தாலுகா அமைக்கப்படும், தலைஞாயிறில் உள்ள பாலசமுத்திரம் குளம் 2 கோடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது, பழைய ஆற்றங்கரை சாலை 2 கோடியில் போடப்பட்டுள்ளது, பிரிஞ்சிமூலையில் கதவணை கட்டப்பட்டுள்ளது, மகாராஜபுரம் துளாசபுரம் சாக்கை பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.570 கோடியில் வெள்ளாறு அரிச்சந்திர ஆறு, வளவனாறு, அடப்பாறு, பாண்டவ ஆற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று உள்ளது உள்ளிட்ட பல்வேறு பணிகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் வழிநெடுகிலும் பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் வரவேற்றனர். தற்போது அரசு முதியவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இதனால் மருமகள் மாமியாரை பார்த்து முறைத்த காலம் போக, தற்போது மாமியார் மருமகளை பார்த்து முறைத்து வருகிறார்கள் என்றும் தற்போது மாமியாரை-மருமகள்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் பேசினார்.

Tags : AIADMK ,OS Maniyan ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்