×

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து எம்பி திருச்சி சிவா பிரசாரம்

கரூர், மார்ச்30:கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளராக சிவகாமசுந்தரி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்து இரண்டு வாரங்களாக தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு வீடு வீடாகவும், திறந்த வேனில் சென்றும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று 7மணி முதல் இரவு 9.30மணி வரை மாவத்தூர் பஞ்சாயத்து, செம்பியாநத்தம் பஞ்சாயத்து, பாலவிடுதி பஞ்சாயத்து, தரகம்பட்டி மற்றும் கீழப்பகுதி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளான வெங்கடேஷ்வரா நகர், பெருமாள்கோயில் பட்டி, வினோபாஜிபுரம், கோடங்கிப்பட்டி, மசாலு£ர், மாவத்து£ர், ராயப்பகவுண்டனூர், குருணியூர், நாயக்கனூர், செங்காடு, வடக்கு களம், சிங்கம்பட்டி, சாந்துவார்பட்டி, பாலவிடுதி, ஆலமரத்துப்பட்டி, தரகம்பட்டி, கேகேஎம் நகர், நவக்குளம், மைலம்பட்டி, சிந்தாமணிப்பட்டி ஆகிய 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, நேற்று காலை 10மணியளவில் புலியூர் கடைவீதியில் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து திருச்சி சிவா பேசியதாவது:
கொரோனா காலத்தில் திமுக, 5ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என கூறியது. ஆனால், அரசு ரூ. 1000ம்தான் வழங்கியது. மீதி 4ஆயிரத்தை ஜூன் 3ல் திமுக வழங்கும் என்றார்.

Tags : Trichy Siva ,Krishnarayapuram ,DMK ,Sivakamasundari ,
× RELATED பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள்...