×

போர்வெல் இயந்திரம் எரிந்து நாசம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 29: வாத்தலை அருகே உள்ள ஆமூரில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயல் பகுதியில் போர்வெல் அமைக்கும் பணி நடந்தது. அப்போது போர்வெல் அமைக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த போர்வெல் ஊழியர்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போர்வெல் இயந்திரம் எரிந்து நாசமானது. இதுகுறித்து வாத்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...