×

அனைத்து வசதி கொண்ட தொகுதியாக மாற்றுவேன் துறையூர் அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி வாக்குறுதி

துறையூர், மார்ச் 29: துறையூர் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி, உப்பிலியபுரம் பகுதி கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று கொடுத்துள்ளேன். பச்சைமலையில் மலைவாழ் மக்களுக்காக சாலை வசதியை மேம்படுத்தி கொடுத்துள்ளேன். எனவே உங்களில் ஒருவராக பணியாற்ற மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள். துறையூரை அனைத்து வசதி கொண்ட தொகுதியாக மாற்றுவேன் என்றார்.

உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் ராம்மோகன், பேரூராட்சி செயலாளர் ராஜேந்திரன், உப்பிலியபுரம் நகர செயலாளர் ராஜாங்கம், துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் மனோகரன், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், அத்தியப்பன் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,Indira Gandhi ,Thuraiyur ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...