×

அதிமுக அரசின் திட்டங்களை எடுத்து கூறி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் வாக்கு சேகரிப்பு

திருச்சி, மார்ச் 29: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இ.பி.ரோடு, தாராநல்லூர், அலங்கநாதபுரம், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அவர் பொதுமக்களிடம் அரசின் சாதனைகளை கூறி வாக்குகள் சேகரித்தார். மேலும் அவர் பேசுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர் அய்யப்பன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.

Tags : Vellamandi Nadarajan ,AIADMK ,Trichy East constituency ,AIADMK government ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...