பொன்னமராவதி,மார்ச்29: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அக்கினி பால்குட விழா நடந்தது. வலையாண்டி மலையாண்டி கோயில் முன்பு இரண்டு அக்கினிக்குண்டம் வளர்க்கப்பட்டிருந்தது. சிவன்கோயில் மற்றும் கச ஊரணிக்கரையில் இருந்து ஊர்வலமாகச்சென்று பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சென்று அக்கினியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.. இதே போல தேனிமலை முருகன்கோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயில், வையாபுரி சுப்பிரமணியர; கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திர விழா சிறப்பு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.