×

வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்சாலை தொடங்குவேன் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் பிரசாரம்

புதுக்கோட்டை, மார்ச் 29: விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:வரலாற்று சிறப்பு மிக்க காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் புதுக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் இப்பகுதியில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இதேபோல் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்.

கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டியுள்ளேன்.வேலை வாய்ப்பை உருவாக்க பெரிய கம்பெனிகள் இங்கு தொழில் தொடங்க உள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெருகும். இளைஞர்கள் அனைவருக்கும் தவறாமல் வேலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கிறேன். இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் உங்களோடு இருப்பேன் என்றார். மேலும் விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அதிமுக அரசு வழங்கியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்கு கொண்டு வாந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன் எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை மக்களுக்காக உழைப்பேன். உங்களுக்கு உழைத்த எனக்கு நீங்கள் ஓட்டளிப்பதே சரியான தீர்பாக அமையும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Tags : AIADMK ,Vijayabaskar ,
× RELATED பாஜவை கழற்றிவிட்டு அதிமுக கூட்டணி...