×

அனிதாராதாகிருஷ்ணன் முன்னிலையில் மணப்பாடு அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

உடன்குடி,மார்ச்.29: மணப்பாடு அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.  உடன்குடி யூனியனுக்குட்பட்ட மணப்பாடு பஞ்சாயத்து 3வது வார்டு அதிமுக செயலாளர் போல்டன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் அன்சல் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி தண்டுபத்திலுள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் அனிதாராதா கிருஷ்ணனை சந்தித்து திமுகவில் இணைந்தனர். அப்போது மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன், மாவட்ட சுற்றுசூழல் அணி ரவி பொன்பாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தகஅணி இளங்கோ, மாணவரணி அமிர்தாமகேந்திரன், மணப்பாடு பஞ்சாயத்து செயலாளர் மைக்கிள், யூனியன் கவுன்சிலர் லோபோரின், லேபோ ஆகியோர் உடனிருந்தனர்.   

 இதுகுறித்து திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘10ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் ஆட்சி மாற்றத்திற்க்கான அறிகுறிகள் தென்பட துவங்கிவிட்டன. இதனால் அனைத்து தரப்பு மக்களும், தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு திமுகவில் இணைந்து வருகின்றனர். மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் திமுக தலைவர் ஸ்டாலின் பூர்த்தி செய்வார்’ என்றார்.

Tags : Manappadu ,AIADMK ,DMK ,Anitha Radhakrishnan ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...