×

அஞ்செட்டி அருகே புடவை வாங்க கொண்டு சென்ற ₹95 ஆயிரம் சிக்கியது.


தேன்கனிக்கோட்டை, மார்ச் 29: அஞ்செட்டி அருகே வாகன சோதனையில் திருமண பட்டுப்புடவை வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே தக்கட்டி சோதனைச்சாவடியில், பறக்கும் படை அலுவலர் இளங்கோ  தலைமையிலான குழுவினர், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மைசூரைச் சேர்ந்த மாதேசுவாமி  என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ₹95 ஆயிரம் ரொக்கம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, காஞ்சிபுரத்திற்கு திருமண பட்டுப்புடவை வாங்கச் செல்வதாக தெரிவித்தார். ஆனால், அதற்கான ஆவணமில்லாததால், அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தளி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து, பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Anchetti ,
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...