×

பதற்றமான பகுதி உட்பட 1,185 வாக்குச்சாவடிகளில் வெப் காமிரா ஏற்பாடு

விருதுநகர்,மார்ச் 29:  விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,881 முதன்மை வாக்குச்சாவடிகள் உள்ளன.
கொரோனா தொற்று பரவலால் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, கூடுதலாக 489 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு 2,370 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன. 7 தொகுதிகளிலும் 16,68,751 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏப்.6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 11,376 தேர்தல் பணியாளர்களுக்கு இரு கட்ட பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களுக்கான தபால் ஓட்டுகளை போட்டு வருகின்றனர். ஏப்.3ல் மூன்றாம் கட்ட பயிற்சியும், ஏப்.5ல் 4ம் மற்றும் இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, பணியாற்ற உள்ள வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்ட உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான 201 வாக்குச்சாவடிகள் மற்றும் கடந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் ஒரே வாக்காளருக்கு பதிவான 6 வாக்குச்சாவடிகள் உட்பட 1,185 வாக்குச்சாவடிகளில் வெப் காமிராக்கள் பொருத்தும் பணி துவங்கி நடந்து வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...