×

சிவகாசி அருகே பலரிடம் பணமோசடி

சிவகாசி, மார்ச் 29: சிவகாசி அருகே விளாம்பட்டி பூலாவூரணியை சேர்ந்தவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருபவர் மோகன்தாஸ் (58). இவரிடம் திருவாரூரை சேர்ந்த அசோக் என்பவர் , ஹைதரபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், இவரிடம் தொழில் நடத்த ரூ. 5 லட்சம் லோன் தருவதாக அணுகியுள்ளார். இதற்கு மோகன்தாஸிடம் பல்வேறு வங்கி கணக்கினை கொடுத்து ரூ. 47 ஆயிரம் வரை பணம் போட கூறியுள்ளார்.
அதன்படி அவரும் பணம் போட்டுள்ளார். அதன் பின்னர் அசோக்கினை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல் மோகன்தாஸின் உறவினர்கள் சக்தி ரூ. 7500, லிங்கராஜ் ரூ. 31,500 பணம் கட்டியுள்ளனர். ஆனால் அவர் லோன் வழங்கவில்லை. பணம் வாங்கி லோன் தருவதாக கூறிய அசோக், அவரை சேர்ந்த ஆர்த்தி, சுதாபிரியா ஆகியோர் மீது மோகன்தாஸ் மாரனேரி போலீஸ் ஸ்ேடஷனில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு