×

காரியாபட்டி பகுதியில் தங்கம் தென்னரசு தீவிர வாக்குசேகரிப்பு

காரியாபட்டி,மார்ச் 29:  காரியாபட்டி பகுதியில் திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ வாக்குகேட்டு தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டார். தோனுகால், கரியனேந்தல், கனக்கனேந்தல், ஜோகில்பட்டி, பி.புதுப்பட்டி, சித்துமூன்றடைப்பு  உள்ளிட்ட  30 கிராமங்களில்அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜோகில்பட்டி - கணக்கனேந்தல் இடையே போக்குவரத்தை சுலபமாக்க குண்டாற்றின் நடுவில் பாலம் கட்டப்படும். மேலும் தடுப்பணை அமைத்து  குடிநீர் தேவையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்,  சித்துமூன்றடைப்புக்கு நிறுத்தப்பட்ட மதுரை அரசு பஸ் நிர்வாகத்தில் பேசி மீண்டும் இயக்கப்படும்,  நமச்சிவாயபுரம் தார்ச்சாலை விரைந்து முடிக்கப்படும் என்றார். புதுப்பட்டியில் திமுகவில் இனைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை தங்கம் தென்னரசு எம்எல்ஏ வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் வைஸ் சேர்மன் ராஜேந்திரன், வர்த்தக அணி போஸ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், விவசாய அணி தங்கப்பாண்டியன்,  செல்வராஜ், பேரூர் துணைசெயலாளர் கல்யாணி, ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர்,  முத்துகுமார், உப்பிலிக்குண்டு குருசாமி, நகர மாணவரணி பாலமுருகன், ஊராட்சி தலைவர்கள் சிவசக்தி,  ஜெய்கணேஷ், மதிமுக கலைமணி, கம்யூனிஸ்ட் அம்மாசி, விசிக ஜெயப்பாண்டி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kariyapatti ,
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி