சாயல்குடி, மார்ச் 29: கமுதியிலிருந்து கடலாடி வரும் அரசு பஸ் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் வழியாக கமுதி செல்ல அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டது, காலை, மாலை என இரு வேளை மட்டும் வந்து செல்லும் இந்த பஸ்ஸை கடலாடி கோவிலங்குளம் வழித்தடத்தில் உள்ள மங்களம், ஆப்பனூர் தெற்கு கொட்டகை, கொம்பூதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் கோவிலாங்குளம் கமுதி வழித்தடத்தில் உள்ள தோப்படைபட்டி, செங்கற்படை, புதுக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் என 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வந்தனர்.