×

ஒட்டன்சத்திரத்தில் அதிமுக பேச்சாளர் குறித்து திமுக புகார்

ஒட்டன்சத்திரம், மார்ச் 29: திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொன்னுச்சாமி, ஒட்டன்சத்திரம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ஏப்.24ம் தேதி ஒட்டன் சத்திரம் பஸ்நிலையம் அருகே முதல்வர் பிரசாரம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் அதிமுக வேட்பாளர் நடராஜனை ஆதரித்து தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் பேசினார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் சக்கரபாணி உள்ளிட்டோரை அருவருக்கத்தக்க, அசிங்கமான வார்த்தைகளை பொதுமக்கள் மத்தியில் பேசி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக அல்லாமல் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ேபசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த முருகானந்தம் செந்தில் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

Tags : DMK ,AIADMK ,Ottanchattaram ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...