×

ஒரகடம் அருகே சோகம் பஸ் மோதி மகன் பலி தாய் படுகாயம்

பெரும்புதூர், மார்ச் 29: ஒரக்கடம் அருகே நடந்து சென்றவர்கள் மீது தனியார் பஸ் மோதியதில் மகன் சம்பவ இடத்திலேயே பலினானர். அவரது தாய் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கு தாம்பரம், காந்தி நகர், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா (39). இவரது மனைவி  பேபி (37). இவர்களது மகன் தருண் (7). ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பேபி, மகன் தருணுடன் கோயிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து, 2 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர். தாம்பரத்தில் இருந்து வண்டலூர் - வாலாஜாபாத் சாலை வழியாக வல்லக்கோட்டை நோக்கி  ஒரகடம் அருகே உள்ள காரணிதாங்கல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரகடம் பகுதியில் தனியார் பைக்  தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அப்போது அங்கு தொழிலாளர்களை ஏற்றி கொண்டு வந்த, கம்பெனி பஸ், நடந்து சென்று கொண்டிருந்த பேபி, தருண்  மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் தருண் பரிதாபமாக இறந்தான். படுகாயமடைந்த பேபி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Oragadam ,
× RELATED லாரி மோதி காவலாளி பலி