×

பைக்குகள் மோதி விபத்து 2 வாலிபர்கள் பரிதாப பலி

சென்னை, மார்ச் 29: மதுரவாயல் சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(21). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் வெங்கட்ராமன்(18) என்பவருடன் பைக்கில் முட்டுகாடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கானத்தூர் கலைஞர் நகரை சேர்ந்த வடிவேலு(34) என்பவர் எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்தார். முட்டுக்காடு படகு குழாம் அருகே வந்தபோது, இருவரின் பைக்கும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாயின. இதில், முருகனும், வடிவேலுவும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். வெங்கட்ராமன் பலத்த காயமடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெங்கட்ராமனை மீட்டு,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த அடையாறு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகன், வடிவேலு ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...