×

வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது

திருச்சி, மார்ச் 26: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறையை சேர்ந்தவர் பிரகாஷ் (24). ரங்கம் பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்துள்ளார். மண்ணச்சநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ரவுடி நிவாஸ் (21) என்பவர் நேற்று பூக்கடைக்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி பிரகாஷிடம் ரூ.500 பறித்து சென்றார். இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் நிவாசை கைது செய்து ரங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்
ரங்கம் திமுக வேட்பாளர் பழனியாண்டி வாக்குறுதி
திருச்சி, மார்ச் 26: ரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று திருவளர்ச்சோலை, மேலகொண்டையம்பேட்டை, கீழகொண்டையம்பேட்டை, அக்ரகாரம், பாரதியார் தெரு, ஜம்புகேஸ்வரர் நகர், சீனிவாசநகர், பர்மா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக சென்று திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் கொடுத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார். வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரங்கம் தொகுதி மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். பிரசாரத்தில் ரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், பொதுக்குழு உறுப்பினர் செவந்திலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rowdy ,
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...