துறையூர், மார்ச் 26: துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி, சுற்றுவட்டார கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று துறையூர் நகர் பகுதியான மேட்டுத்தெரு, தெப்பக்குளம், வடக்குத்தெரு, கீழகடைவீதி, சிக்கபிள்ளையார் கோவில் தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு, மார்க்கெட் ரோடு, குட்டகரை, குட்டகரைமேடு, காமராஜர் நகர், எக்ஸ்டென்ஷன், ஆஸ்பத்திரி ரோடு, புதுகாட்டு தெரு, விநாயகர் தெரு மற்றும் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தார்.
அபபோது இந்திராகாந்தி பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் உங்கள் வீடு தேடி வர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். மீண்டும் உங்களுக்கு உதவ எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். துறையூர் நகரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறேன் என்றார்.
துறையூர் நகர செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் சேனை செல்வம், வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் மனோகரன் உடனிருந்தனர்.