×

பாதாள சாக்கடை பணியை விரைவில் முடித்து சாலைகள் அமைக்கப்படும் திருவெறும்பூர் மநீம வேட்பாளர் முருகானந்தம் உறுதி

திருவெறும்பூர், மார்ச் 26: திருவெறும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் இன்ஜினியர் முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை திருவெறும்பூர் அருகே உள்ள கீழகல்கண்டார்கோட்டை மற்றும் கீழக்குறிச்சி பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார். அப்போது நான் வெற்றி பெற்றால் மாநகராட்சி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்படும். அரியமங்கலம் பகுதியில் உள்ள கிடங்கில் குப்பைகள் அகற்றப்பட்டு 8 முதல் 10 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதன்மூலம் தடையில்லா மின்சாரம் திருவெறும்பூருக்கு கிடைப்பதுடன் கிரீன் சிட்டிகளின் சிட்டியாக மாறும். உய்யக்கொண்டான் வாய்க்கால் உட்பட அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என்று கூறி வாக்குகள் சேகரித்தார்.
மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான இஜக, சமக மற்றும் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சியினருடன் மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் சூரியூர் சக்தி, மாவட்ட துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன், வழக்கறிஞர் அணி ஜெபராஜ், ஜானி பாஷா, தொழிலாளர் அணி ஜான்சன் ராஜ்குமார், தொழில் முனைவோர் அணி அய்யனார், நகர செயலாளர் மலை ஆனந்தன் உடனிருந்தனர்.

Tags : Thiruverumbur ,Manima ,Muruganantham ,
× RELATED ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை...