×

பாகனூர் பகுதியில் ரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

திருச்சி, மார்ச் 26: ரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 10 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திறந்த வேனில் சென்றும், வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார். இவர் செல்லும் இடமெல்லாமல் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் ரங்கம் தொகுதியின் மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாகனூர் பகுதியில் அதிமுக அரசு இதுவரை செய்த நலத்திட்ட பணிகள், இனிமேல் செய்யவுள்ள நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியமைய இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
இதைதொடர்ந்து பாகனூரில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயத்தில் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி பிரார்த்தனை செய்தார்.

Tags : AIADMK ,KP Krishnan ,Aurangabad ,Baganur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...