×

இன்னும் 2 மாதத்தில் பொதுமக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் திருவெறும்பூர் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம்

திருவெறும்பூர், மார்ச் 26: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நவல்பட்டு, சோழமாதேவி ஆகிய ஊராட்சிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒட்டுமொத்த தமிழக மக்களும், அடுத்த முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று முடிவு செய்து விட்டார்கள். எனவே இந்த தொகுதியி–்ல் என்னை நீங்கள் வெற்றி பெற வைத்தால் தான் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். இன்னும் 2 மாதத்தில் உங்களது அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றும் காலம் வரும்.
கொரோனா காலத்தில் நமக்கு ஏற்பட்ட இழப்பையொட்டி வருகிற ஜூன் 3ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளன்று ரேஷன் அட்டை உள்ள எல்லாருக்கும் ரூ.4,000 வழங்கப்படும். எனவே திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
நவல்பட்டு ஊராட்சி புதுத்தெருவில் தேர்தல் பிரசாரத்தில், திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரனார் உருவச்சிலை, திருச்சி மாநகரில் அமைக்கப்படும் என வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு கோரிக்கையை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து இமானுவேல் சேகரனார் நினைவு நாள், பிறந்த நாளை அரசு விழாவாக திமுக நடத்தும் என்றார்.

Tags : Thiruverumbur ,DMK ,Mahesh Poyamozhi ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி