×

அமைச்சர் காமாராஜ் உறுதி திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

திருவாரூர் மார்ச் 26: திருவாரூர் அருகே நன்னிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் பகுதியில் வசித்து வருபவர் பிரவின்(24). இவர் குடவாசல் அருகே கிராமம் ஒன்றில் 23 வயது கொண்ட பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக அவருடன் பலமுறை தனிமையில் இருந்து வந்த நிலையில் பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் பிரவீனை கைது செய்தனர்.

Tags : Minister ,Kamaraj ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...