திருவையாறு,மார்ச் 26: திருவையாறு அடுத்த வளப்பக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மதியழகன்(52). இவர் கடந்த 20ம் தேதி பைக்கில் நடுக்கடைக்கு வந்துவிட்டு தன் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பினார். அவர், நடுக்கடை மெயின்ரோட்டில் பஸ்ஸடாப் அருகே செல்லும்போது கண்டியூரிலிருந்து திருவையாறு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டது.
இதில் மதியழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருவையாறு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ரீதியாக பாரபட்சம்
ஒரு கட்டத்தில் முத்தரையர் சமூக பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்து கண்ணீர் சிந்தியுள்ளார். ஆனால் அவர்கள் இந்த காதில் வாங்கிக் அந்த காது வழியாக விட்டு சென்று விட்டனர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் கிராமத்திற்கு இவர் சென்றதே கிடையாது. அவர்கள் வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்கள் நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. அப்படியே தவிர்க்க முடியாமல் கலந்து கொண்டாலும் அவர்கள் திருமணங்களில் கூட அவர் தேநீர், உணவு சாப்பிட்டது கிடையாது. தோளில் தட்டிக் கொடுப்பது போல் தோள் மேல் கையை போட்டு பல பேர் முன்னிலையில் நடிப்பார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒருமையில் தான் பேசுவார். அவர் எதிரில் உட்கார விடமாட்டார் என இப்பகுதியினர் குமுறுகின்றனர்.