×

திருமயம் அருகே மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

திருமயம், மார்ச் 26: திருமயம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் அருகே உள்ள தே.பூவம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுக்கும் திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக தே.பூவம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 17ம் தேதி மதுபோடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெண்கள் மண் பானை, குடத்தில் மண் நிரப்பிமொச்சை, சோளம், தட்டைபயிறு, நெல் உள்ளிட்ட நவதானிய விதைகள் கொண்டு முளைக்க வைத்தனர். பின்னர் நேற்று முளைப்பாரி எடுக்கும் நிகழச்சிக்காக பாத்திரத்தில் முளைத்த பயிர்களை மலர்கள் கொண்டு அலங்காரம் செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதி பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று பிள்ளையார் ஊரணியில் கொட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதேபோல் அதிகாரிபட்டி, ஆண்டிபட்டி முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து அப்பகுதி பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விவசாயம் வளம் பெறவும், நோய் நீங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவும் வருடம் தோறும் இந்த விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Mariamman Temple ,Thirumayam ,
× RELATED கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயிலில் தேர் பவனி கோலாகலம்