×

இலுப்பூர் அருகே ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.4.50 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

இலுப்பூர், மார்ச் 26: இலுப்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.4.50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் விராலிமலை சாலையில் நேற்று தாமரை ஊரணி அருகில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராமு தலைமையிலான குழுவினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது விராலிமலை நோக்கிச்சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர். இதில் 4 எல்இடி டிவிக்கள், 4 கம்ப்யூட்டர் சிபியு, 4 வெப் கேமராக்கள் மற்றும் கீ போர்டு வயர்கள் ஆகியவை சிக்கின. இவற்றிற்கு ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை குழுவினர் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் விராலிமலை சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணியிடம் பறிமுதல் செய்த எலக்ட்ரானிக் பொருட்களை ஒப்படைத்தனர்.

Tags : Iluppur ,
× RELATED இலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக...