×

திமுக வேட்பாளர் பிரபாகரன் உறுதி அரியலூர் மாவட்டத்தில் பூத் சிலிப்பிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு

அரியலூர், மார்ச் 26: அரியலூர் மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலின் வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்பட பூத் சிலிப்பிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தலைமை தேர்தல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டதன் பேரில், ஏப்.6ம் தேதி அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படவுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி விபரம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். வாக்குப்பதிவு நாளுக்கு 5 நாட்களுக்கு முன்னர் வாக்காளர் தகவல் சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு விடும். தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் தகவல் சீட்டு மட்டுமே போதுமான ஆவணம் அல்ல.
எனவே வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றான பாஸ்போர்ட் ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சலக மேலாளரால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட நேர்த்தி அட்டை, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்பி, எம்எல்ஏ மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் என அர்யலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Booth Silipu ,Arrialur ,Prabakaran ,
× RELATED ஜானுவை மறக்க வைத்த செந்தாழினி: கவுரி கிஷன் நெகிழ்ச்சி