×

அன்னமங்கலத்தில் நிரந்தர அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் வாக்குறுதி

பெரம்பலூர்,மார்ச் 26: அன்னமங்கலத்தில் நிரந்தர அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.
பெரம்பலூர் (தனி) சட்டம ன்றத் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக இளம்பை தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இதனையொட்டி, பெரம்பலூர் சட்ட மன்றத்திற்கு வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஈச்சங்காடு, அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூஞ்சோலை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: வேப்பந்தட்டை தாலுகா மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான விசுவகுடி அணை கட்டும் திட்டத்தை ரூ.33 கோடியில் அதிமுக அரசுதான் கொண்டு வந்தது. விசுவக்குடி அணைக்கட்டினை சுற்றுலாத் தலமாக்க ரூ.2 கோடியில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விசுவக்குடி அணையிலிருந்து அன்னமங்கலம் ஏரிக்கு வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படும், அன்னமங்கலத்தில் அதிக அளவில் நெல்சாகுபடி செய்யப்படுவதால் இப்பகுதியில் அரசு நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து முகமதுபட்டணம், தொண்டமாந்துறை பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளருடன் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன் மாவட்ட இணைச்செயலாளர் ராணி, துணை செயலாளர் லட்சுமி உட்பட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Tamilselvan ,Annamangalam ,
× RELATED நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார்