தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகைமங்கலத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பக்கம் உள்ள ஒழுகைமங்கலத்தில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உடனே அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முகாமில் 17 பேருக்கு பரிசோதனை செய்யபட்டது.
இந்த முகாமில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.