×

சீர்காழி தனி தொகுதிக்கான தேர்தல் நடைமுறை ஆலோசனை கூட்டம்

சீர்காழி: சீர்காழி தனி தொகுதிக்கான தேர்தல் நடைமுறை குறித்த ஆலோசனை கூட்டம் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் நடைமுறைகள் குறித்து சீர்காழி தனித்தொகுதிகான ஆலோசனை கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மண்டல அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், நிலையான கண்காணிப்பு குழு வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், தாசில்தார் ஹரிதரன், சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா ஆகியோர கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

Tags : Sirkazhi Separate Constituency ,
× RELATED வீடு தீப்பிடித்து பொருட்கள் நாசம்