×

சீர்காழி அருகே முன்விரோதம் வாலிபருக்கு கத்திக்குத்து

சீர்காழி: சீர்காழி அருகே சட்டநாதபுரம் வடக்குத்தெருவில் வசிப்பவர் மாரிமுத்து. இவரது மகன் திருஞானசம்பந்தம் (33). இவருக்கும், சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிக்கும் சாகுல்அமீது (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று தென் பாதியில் உள்ள ஒரு டீக்கடையில் திருஞானசம்பந்தம் டீ குடிக்க வந்தபோது அங்கு வந்த சாகுல்அமீது, அவரது சகோதரர் மன்சூர் அலி மற்றும் அவரது தந்தை அப்துல்லா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து திருஞானசம்பந்தத்தை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த திருஞானசம்பந்தம் சீர்காழி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : Sirkazhi ,
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...