சீர்காழி: சீர்காழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் முதல்கட்ட செலவு கணக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் 10 வேட்பாளர்களின் வரவு செலவு கணக்கு நேற்று முதற்கட்டமாக சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சஞ்சய் ஜெயினால் ஒத்திசைவு செய்யப்பட்டது. அதற்கான ஆய்வுக் கூட்டம் சீர்காழி , வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக உள்ளிட்ட 10 வேட்பாளர்களின் முதற்கட்ட செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் செலவின நோடல் அலுவலர் வெங்கடேசன், உதவி செலவின பார்வையாளர் சிவசங்கர், துணை வட்டாட்சியர் ஜெயசெல்வம், தேர்தல் செலவின பார்வையாளரின் தொடர்பு அலுவலர் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.