×

குளித்தலை தொகுதி திமுக வேட்பாளர் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

குளித்தலை:  குளித்தலை சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்குழு குழு உறுப்பினர் ராஜு தலைமை வகித்தார். கூட்டத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கும் கொள்கை முடிவின்படி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் . மாணிக்கத்தை வெற்றி பெற செய்வது.
குளித்தலை நகரத்திற்கு உட்பட்ட 24 வார்டுகளிலும், 13 ஊராட்சிகளிலும், 2 பேரூராட்சிகளிலும், தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொள்வது, 10,000 துண்டறிக்கைகள் அச்சிட்டு மக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டுவது, இரண்டு நாள் தெருமுனை பிரசாரம் நடத்துவது என தீர்மானிக்கபட்டது. கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் இலக்குவன், மாவட்டகுழு உறுப்பினர்கள், முத்துச்செல்வன், இளங்கோவன், தோகைமலை ஒன்றியச் செயலாளர் முனியப்பன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Kulithalai ,DMK ,Marxist Communist Party ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...