×

ரேகா பிரியதர்ஷினிக்கு ஆதரவாக 2 கி.மீ தூரம் நடந்து சென்று மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

கெங்கவல்லி, மார்ச் 26: ஆத்தூர் ராணிப்பேட்டையில் நடைபெற்ற பிரசாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து, கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட தலைவாசல்-வீரகனூர் நெடுஞ்சாலையில் உள்ள மும்முடி பஸ் நிலையத்தில் வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினிக்கு ஆதரவாக, 2 கி.மீ தூரம் நடந்துசென்று அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பெண்களிடம் திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, ரேகா பிரியதர்ஷினி பேசுகையில், ‘தலைவாசல் தினசரி மார்க்கெட்டில் அதிநவீன குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும். கெங்கவல்லியில் புதிய பஸ் நிலையம், வீரகனூரில் பால் குளிரூட்டும் நிலையம், கெங்கவல்லியில் அரசு செவிலியர் கல்லூரி, தலைவாசல், கெங்கவல்லி விவசாயிகளின் நீர் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் கொண்டு வருதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்,’ என்றார். பிரசாரத்தின் போது கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், சேலம் எம்பி பார்த்திபன், தலைவாசல் திமுக பொறுப்பாளர் மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Riga Priyatarshini ,Q. Stalin ,
× RELATED கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு