×

போச்சம்பள்ளி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

போச்சம்பள்ளி, மார்ச் 26: போச்சம்பள்ளி பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போச்சம்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்டம் முழுவதும், கோடைக்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது.  ஒரு நாளைக்கு 3 அல்லது 5 முறை மின் வெட்டு தொடர்கிறது. கோடையின் தாக்கம் கிராமப்புற மக்களையும் விட்டு வைக்கவில்லை.  பகல் நேரங்களில் வெயில் சூட்டெரிக்கும் நிலையில், அனலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கியவாறு மின் விசிறியையே நம்பியுள்ளனர்.ஆனால், அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருவதால், பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் மின் வெட்டு என்பதே இல்லை என அறிவித்து அதிமுக அரசு  மார்தட்டி வருகிறது. அது, பொய் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போச்சம்பள்ளி பகுதியில் திடீர் திடீரென மின் வெட்டு ஏற்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் போச்சம்பள்ளி பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...