×

தொப்பூர் கணவாயில் 2லாரிகள் கவிழ்ந்து விபத்து

நல்லம்பள்ளி, மார்ச் 26: நாக்பூரில் இருந்து நூல் பேலை ஏற்றிக்கொண்டு, சரக்கு லாரி கோவைக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. லாரியை திருப்பத்தூர் பள்ளடம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி(43) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு 11மணியளவில், தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடியது. அப்போது திப்பட்டி கூட்டுரோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய் மட்டை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய தேங்காய்மட்டை ஏற்றி வந்த லாரி, எதிர்புறமாக சென்ற சேலம்- தர்மபுரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த லாரி டிரைவரான தர்மபுரி அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்த மணி(55) காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய நூல் பாரம் ஏற்றி சென்ற லாரி, தொப்பூர் கணவாயில் கவிழ்ந்து விபத்துள்ளாது. இதில் லாரி டிரைவர் திருமூர்த்திக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் இருவரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் 3மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Toppur Pass ,
× RELATED தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து..!!