×

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தவறு இழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை சண்முகையா எம்எல்ஏ உறுதி

ஓட்டப்பிடாரம், மார்ச் 26:  ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா எம்எல்ஏ, நேற்று மாலை தெற்கு வீரபாண்டியபுரம், அ. குமரெட்டியாபுரம், சாமிநத்தம், ராஜாவின் கோவில், உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். தெற்கு  வீரபாண்டியபுரம் பகுதியில் பேசுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்களின் உயிர் பறிபோனது. எனவே, இதில் தவறிழைத்த அரசு அதிகாரிகள், போலீசார் என குற்றம் செய்த அனைவர்  மீதும் கண்டிப்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ’ என்றார்.

Tags : Shanmuga ,MLA ,Sterlite protest ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...